![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGdLGjhPsNNRjNCzY7YtdXQTMZbRRGoxHRDN-QHQ9LhRsbr_GU2rGVqmq11S81JQ1DZJpmIEoVzNrPYuxm3gjYXvg8dILj_wOeePpQdhAlESneIZRyXG9P0wyob7gfRxdgJ2L-mmCh7uL1PqXx9rzDBWhjSqsYdjCbO5ocPpNU1ZPfC_eI31reeKSc1w/s16000/IMG_3791.jpeg)
அந்த ஏர்பஸ் ஏ321 ரக விமானம், ஜேஜு தீவிலிருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.40 மணிக்கு டேகு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், ஒன்பது பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக டேகு தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 8 பேர், ஜேஜுவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்று அத்தீவின் கல்வி அலுவலகம் கூறியது.
அவசர கதவு உள்ள வரிசைக்கு அருகில் இருந்த பயணி ஒருவரை அதிகாரிகள் விசாரித்ததாக ஆசியானா அதிகாரிகள் கூறினர்.
“அவசர கதவுக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் அதன் கைப்பிடியைத் தொட்டார். காவல்துறையினர் இச்சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்”, என்று அதிகாரிகளில் ஒருவர் சொன்னார்.