கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்ற பொலிசார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்ற பொலிசார்!

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்த வழக்கு இன்று (18) அழைக்கப்பட்டபோது, ​​கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்றை பொலிஸார் கைவிட்டதாக சிட்னி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியின் போது, ​​அந்நாட்டில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.