இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள்!


கடந்த மே மாதம் 20ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதன்படி, அவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.


லங்கா ஏகநாயக்க என்ற 33 வயதுடைய நபர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் கிளப் முகாமையாளர் எனவும் அவரது இடது கையின் கீழ் இடது கை மணிக்கட்டில் இருந்து மேல்நோக்கி பறவையின் இறகு ஒன்றை பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு – 071 859 1733


நிலைய கட்டளைத் தளபதி கொழும்பு குற்றப் பிரிவு – 071 85917335


 நிலைய அதிகாரி விசாரணை பிரிவு 1 – 071 8596503


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.