மகளின் காதலனை கடத்தி விளாசிய பெற்றோர் கைது!! #கண்டி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மகளின் காதலனை கடத்தி விளாசிய பெற்றோர் கைது!! #கண்டி

தனியார் வகுப்புக்கு நிறைவடைந்ததன் பின்னர், அருகில் இருக்கும் ஆள் நடமாற்றம் இல்லாத வீதியில் காதல் ஜோடி நடந்து சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது வாகனத்தில் வந்து, காதலனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், காதலியின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பன் ஆகிய மூவரும் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 17 வயதான இளைஞனும், 18 வயதான யுவதியுமே தனியார் வகுப்புக்குச் சென்று அந்த வீதியில் கைக்கோர்த்து நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது வாகனமொன்றில் வந்த மேற்படி மூவரும் அவ்விளைஞனை  பலவந்தமாக ஏற்றிக்கொண்டு, யட்டவல ​பிரதேசத்தில் உள்ள தங்களுடைய வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து இளைஞன் மீது கடுமையான தாக்குதல் ​மேற்கொண்டுள்ளனர்.

கடுமையாக அச்சுறுத்தியதன் பின்னர் அதே வாகனத்தில் ஏற்றிவந்த அம்மூவரும், தித்தவல பிரதேசத்தில் உள்ள மாணவனின் வீட்டுக்குச் சென்று அவரை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.

தாக்குதல்களுக்கு இலக்கான மாணவன், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கட்டுகஸ்தோட்டை பொலிஸார், மாணவின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பனை கைது செய்தனர். தந்தை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார் ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.