கத்தாரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!


கத்தாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 600,000 ரூபா நிதி மோசடி செய்த இரண்டு பெண்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது தொடர்பில் மன்னார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் 23 மற்றும் 42 வயதுடைய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள்.


சந்தேகநபர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.