கண்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; அதிபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; அதிபர் கைது!


இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதான தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரை புபுரஸ்ஸ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 14 மற்றும் 15 வயதுடைய மாணவிகளுக்கு அதிபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புபுரஸ்ஸ காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


51 வயதுடைய குறித்த அதிபர் கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை முடிந்து மாணவர்களுடன் பேருந்தில் கலஹா பகுதிக்கு செல்லும்போது, குறித்த மாணவிகளின் அருகில் அமர்ந்திருந்திருந்த குறித்த அதிபர் தனது பையினால் மூடிக்கொண்டு அவர்களின் உடலை ஸ்பரிசம் செய்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.


மாணவிகளின் வாக்குமூலங்கள் மற்றும் அதை நேரில் பார்த்த மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் முறைப்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இந்த சம்பவங்கள் குறித்து பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் வலய கல்வி அலுவலகத்தில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்துள்ளனர்.


இந்நிலையில் அதிபரை இடமாற்றம் செய்து அந்த அலுவலகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அதிபரின் மனைவியும் ஒரு ஆசிரியை என்றும் அவர் கலஹா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரிவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.