advertise here on top
Join yazhnews Whatsapp Community

மூன்று புதிய மாகாண ஆளுநர்களை நியமனம் செய்த ஜனாதிபதி !

மூன்று புதிய மாகாண ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மே 17) நியமித்துள்ளார்.

புதிய ஆளுநர்கள் மூவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநராக கடமையாற்றிய பி. எஸ். எம்.சார்ள்ஸ் மீண்டும் வடமாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

வடமேல் மாகாண ஆளுநராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜீவன் தியாகராஜா (வடக்கு ஆளுநர்), அனுராதா யஹம்பத் (கிழக்கு ஆளுநர்), அட்மிரல் ஆஃப் ஃப்ளீட் வசந்த கரன்னாகொட (வடமேற்கு ஆளுநர்) ஆகியோர் திங்கட்கிழமை (மே 15) அவர்களின் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கப்பட்டதை அடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.