![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj5KHwIkiaiAkUSp0aAtL1rM9uGrd6rEzlmEXj7wzLPca5jMZeDg02SY_sx_6BKLw7l5HBZyCZhcyN3lWd93Qp6a40Xs7h0ImOe3IFE-G1Ra0VU7FUdiOwM1CuTRtrcCn29IQKeCf-meNPE6Euj-VcLapz9WptETy-_6_iZ8Am1Jtscr7THaTOcfuHZA/s16000/IMG_3396.jpeg)
நபரொருவர் 33 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கழிவறை குழியில் வீசப்பட்டதாகக் கூறி காவல்துறை அவசர எண் 119 மூலம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மூன்று பிள்ளைகளின் தந்தையும் டொலமுல்ல, ஊர்பொக்கவில் வசிக்கும் கபுகே ஜினதாச என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அவரது மனைவி மற்றும் மனைவியின் காதலனால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் ஊருபொக்க பொலிஸார் மொரவக்க நீதவானிடம் உண்மைகளை முன்வைத்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவையடுத்து ஊர்பொக்க பொலிஸார் நேற்று (15) அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட போதிலும் எலும்புக்கூடு எச்சங்களை மீட்க முடியவில்லை.
மேலதிக விசாரணையில், இறந்தவரின் பிள்ளைகள், தங்கள் தாய் உறவினரிடம் தகவலைப் பகிர்ந்து கொண்டதைக் கேட்ட பின்னர், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)