இராஜாங்கன சத்தாரதன தேரருக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராஜாங்கன சத்தாரதன தேரருக்கு விளக்கமறியல்!


இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட இராஜாங்கன சத்தாரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இவரை இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக இராஜாங்கன சத்தாரதன தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்டுபத்தப்பட்டார்.


குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், அவர் அநுராதபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.


இராஜாங்கன சத்தாரதன தேரர், சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்களால், இனங்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்திற்கொண்டு, அவர் கைது செய்யப்பட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.