2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் ஆய்வு முடிவுகள் இணையத்தில் (www.doenets.lk) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் உள்நுழைந்த பின்னர் சரியான குறியீட்டு இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)