புதருக்குள் ஒளிந்திருக்கும் காதல் ஜோடிகளை கைது செய்யும் பணி ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதருக்குள் ஒளிந்திருக்கும் காதல் ஜோடிகளை கைது செய்யும் பணி ஆரம்பம்!

களுத்துறை கடற்கரை மற்றும் கடற்கரை மரங்களின் உள்ளே இருந்த 24 காதலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


களுத்துறை பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


களுகங்கைக்கு அண்மித்த கடற்கரையில் உள்ள பாறைகளுக்கு இடையில் மற்றும் மரப் புதர்களுக்கு இடையில் இருந்து கைது செய்யபட்ட அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.


இவ்வாறு தங்கியிருப்பது பல்வேறு குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என கடும் எச்சரிக்கையுடன் இந்த இளைஞர், யுவதிகள் குழு விடுவிக்கப்பட்டது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.