அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு - பலர் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு - பலர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர்.

ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் புகுந்த மர்மநபர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்மநபரை காவல் துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெக்சாஸுக்கு வடக்கே சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஆலன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் மாலை 3:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் துப்பாக்கிச்சூடு சம்பவம் 'சொல்ல முடியாத சோகம்' என்று தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.