ஒரு வயது குழந்தை உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் மாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு வயது குழந்தை உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் மாயம்!


மாத்தறை - நெலுவ - தெல்லவ, மியனவத்துர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று (13) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஒரு வயது குழந்தை ஒன்று 10 வயது சிறுவன் ஒருவர் 13 வயதுடைய சிறுவர்கள் இருவர் என நால்வர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.


மியன்வத்துர தோட்டத்தில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்றிரவு முதல் சிறுவர்களை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.


காணாமல்போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


காணாமல் போயுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.