![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik1JRclo2F7BzKYOXdrRDo_2fwPXzsonohAw0oqvlAAnSofnOguz40DifXgiJP0doHb1zUkP64gGkMBK-Em2FEXCaiFAcvEFip_yXVMAsRfoPRdTO8HeEYZd5r6NAHraYJSdARdKmr2vVrdlaKDyw6tGXYgTw8mOGblE1_tca523gYx8AFiD8Yjr76dg/s16000/IMG_4492.jpeg)
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும், மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.