பணத்திற்காக விற்கப்பட்டார்? களுத்துறை சிறுமி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பணத்திற்காக விற்கப்பட்டார்? களுத்துறை சிறுமி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவி பணத்திற்காக விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (15) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மாணவி பணத்திற்காக விற்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிறுமியை சந்திப்பதற்கு, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம், சிறுமியின் நண்பியின் காதலன் 20,000 ரூபாய் பணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேகநபரும் சிறுமியை சந்திப்பதற்கு முன்பணமாக 12,000 ரூபாவை சிறுமியின் நண்பியின் காதலனிடம் கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதியாக செயற்பட்டவர், சிறுமியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.