இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் உடன் அமுலுக்கு வரும்வகையில் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் உடன் அமுலுக்கு வரும்வகையில் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!

இந்தியாவில் உடன் அமுலாகும் வகையில் இரண்டாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை இரண்டாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் பெறப்படும் என அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.


கருப்புப் பண பயன்பாட்டினை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


2,000 ரூபாய் நாணயத்தாள்களின் பயன்பாட்டிரன ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது.


இதனால், சந்தையில் அவற்றின் பயன்பாடு பெருமளவில் குறைந்து காணப்பட்டது.


கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி 2,000 ரூபாய் நாணயத்தாள்களின் பயன்பாடு 6.73 இலட்சம் கோடியாக இருந்தது.


இது 2023, மார்ச் 31ஆம் திகதியில் 3.62 இலட்சம் கோடியாக குறைவடைந்துள்ளது.


பயன்பாட்டில் உள்ள 2,000 ரூபாய் நாணயத்தாள்களின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும்.


இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது.


எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.


கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நாணயத்தாள்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.