மேலுமொரு 7 வயது சிறுமியை காணவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொரு 7 வயது சிறுமியை காணவில்லை!


நெலுவ மஹகந்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் 7 வயதுடைய விக்ரமகே டெராஷா என்ற சிறுமியை நேற்று (15) இரவிலிருந்து காணவில்லை என குறித்த சிறுமியின் தந்தை நெலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


குறித்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில் சிறுமியின் தாயின் தங்கை மற்றும் அவருடன் ஒருவரும் நேற்று மாலை சிறுமியைப் பார்க்க வந்துள்ளனர்.


தான் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இரவு 7.10 மணியளவில் மகள் காணாமல் போனதை அறிந்ததாகவும் சிறுமியின் சித்தி அவரைக் கொண்டு சென்றிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.