நாட்டின் 59 MOH பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக பிரகடனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் 59 MOH பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக பிரகடனம்!


கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 32,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நாடு முழுவதும் உள்ள சுமார் 59 MOH பிரிவுகளை டெங்கு அபாயகரமான பகுதிகளாக அறிவித்துள்ளது.


அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், கல்முனை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.