18 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நால்வர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நால்வர்!


கடுகன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள், ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து பெண்ணை கடத்திச் சென்று பொத்தபிட்டிய குருலு வெவாவிற்கு முன்பாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற மூவரும் முச்சக்கர வண்டியில் வைத்து உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் ஏதோவொரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக அந்த பெண் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.