பல பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பலர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பலர் கைது!

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சர்வதேச கடலில் கைது செய்யப்பட்ட ஹெரோயின் கையிருப்பு மற்றும் நபர்கள் சிலர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அதன்படி ரூ. 3.5 பில்லியன் பெறுமதியான 175 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு அதிகாரி கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கடற்படை, பொலிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து பல நாள் மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.