குரங்குகளுக்கு ஓர் நற்செய்தி - அமெரிக்காவுக்கும் செல்லும் வாய்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குரங்குகளுக்கு ஓர் நற்செய்தி - அமெரிக்காவுக்கும் செல்லும் வாய்ப்பு!

அமெரிக்காவும் இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு வழங்கவிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவினால் கோரப்படும் 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் முப்பது இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் காணப்படுவதாகவும், குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு குரங்குகளை வழங்குவதே பொருத்தமானது எனவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என யாரும் கூறவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.