காணாமல்போயிருந்த இரண்டரை வயது சிறுவன் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணாமல்போயிருந்த இரண்டரை வயது சிறுவன் சடலமாக மீட்பு!


காலி - நெலுவ பிரதேசத்தில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவன், வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


2 வயது மற்றும் 8 மாதங்களுமேயான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நேற்று (15) பிற்பகல் முதல் காணாமல்போன இந்த சிறுவனை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்தனர்.


அளுத்கம - தர்கா நகரைச் சேர்ந்த இந்தச் சிறுவன் புத்தாண்டுக்காக நெலுவ பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு தாயுடன் சென்றிருந்தபோது காணாமல் போயுள்ளான்.


இந்தநிலையில், இன்று காலை குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக நெலுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.