பொலிசாரினால் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிசாரினால் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை!

நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு பொருத்தமற்ற வாகனங்கள் மற்றும் பொருத்தமற்ற வகை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நுழைவதற்கு வருவதோடு, அவ்வாறான வாகனங்கள் அதிவேக வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பை நோக்கி வரும் பாதைகளில், வெளியேறும் மையங்களில் சில வாகன நெரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெளியேறுமிடத்தில் அணிவகுத்து நிற்கும் போது தவிர, பாதையை விட்டு நகர முயற்சிக்க வேண்டாம்.

பயணிக்கும் பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மாத்திரம் வாகனங்கள் வர வேண்டும் எனவும், அந்த வாகனங்களுக்கு மாத்திரமே வெளியேற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.