இந்திய முட்டை விற்பனைக்கு அனுமதியில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய முட்டை விற்பனைக்கு அனுமதியில்லை!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார்.


அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், ஒரு மில்லியன் முட்டைகளை தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


அந்த கப்பலில் உள்ள முட்டைகளுக்கான அனுமதியை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் பெற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்காக அந்த முட்டைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் நாளைய தினம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார்.


இதேவேளை, கடந்த 23 ஆம் திகதி இரண்டு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.


இதனையடுத்து ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.