கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை!


பேராதனை - கொப்பேகடுவ பகுதியில் இளம் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


பேராதனை - கொப்பேகடுவ பகுதியில் வைத்து குறித்த ஆசிரியை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்ற போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.