டொலர் நடைமுறை சட்டம் ஒன்றை இடைநிறுத்த மத்திய வங்கி தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் நடைமுறை சட்டம் ஒன்றை இடைநிறுத்த மத்திய வங்கி தீர்மானம்!

 

டொலர் தொடர்பில் நடைமுறையில் இருந்த சட்டமொன்றை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.


இலங்கை மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஏற்றுமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களால் ஈட்டப்படும் டொலர்களை ரூபாவாக மாற்ற வேண்டும் என நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சட்டத்தையே இம்மாத தொடக்கத்தில் இருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி, வெளிநாட்டு நாணயங்களில் வருமானம் ஈட்டுபவர்கள் தமது வருமானத்தை வெளிநாட்டு நாணயத்திலேயே வங்கிக் கணக்குகளில் பராமரிக்க முடியும் என கூறப்படுகிறது.


வெளிநாட்டு பணம் அனுப்பல்கள், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும் போக்கு உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.