மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே காணப்படும் எனவும், உடுகம, நெலுவ, மடுவன்வெல, கும்பக்வெவ மற்றும் யால ஆகிய பிரதேசங்களில் இன்று மதியம் 12:13 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. - வளிமண்டலவியல் திணைக்களம்