அதிகரிக்கப்பட எரிபொருள் ஒதுக்கீடு குறைக்கப்படும்? முக்கிய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கப்பட எரிபொருள் ஒதுக்கீடு குறைக்கப்படும்? முக்கிய தீர்மானம்!

சித்திரைப் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று (17) தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


கடந்த 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் QR குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


முன்னதாக, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை நாளை முதல் முந்தைய அளவுகளுக்கு திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 08 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 04 லீற்றரில் இருந்து 07 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அவ்வாறே பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையிலும், வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், எரிபொருள் ஒதுக்கீட்டை மீள்திருத்தம் செய்வது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.