நாட்டில் இன்று பதிவான தங்கத்தின் விலை விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்று பதிவான தங்கத்தின் விலை விபரம்!


கொழும்பு செட்டியார்தெருவில் தங்கத்தின் விலை சிறியளவான ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து வருகிறது.


அந்த வகையில் இன்றைய தினம் (24) செட்டியார்தெருவில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 176,000 ரூபாவாக காணப்படுகிறது.


அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 162,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இந்நிலையில் இம்மாத இறுதி வரை தங்கத்தின் விலை மாற்றமின்றி சிறியளவான ஏற்ற இறக்கங்களுடன் தொடரும் என செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் மே மாதத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் வாரங்களுக்கு பிறகு தங்கத்தின் விலையானது உலக சந்தையில் அதிகரிக்குமாக இருந்தால் இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2020 டொலர்களுக்கு அதிகமாக உயர்வடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


அவ்வாறதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என இலங்கை தங்க வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.