போலி நாணயத் தாள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி நாணயத் தாள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது!


ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரும், அதனை அச்சிட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை - கட்டுவன காவல்துறையினர் தெரிவித்தனர்.


கட்டுவன காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கட்டுவன - பிந்தனையில் அமைந்துள்ள சூதாட்ட நிலையம் ஒன்று நேற்று (11) காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டார்.


அவரிடமிருந்து 17 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களை காவல்துறையினர் மீட்டனர்.


குறித்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைக்கமைய, கட்டுவன நகரில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


அதன்போது, போலி நாணய தாள்களை அச்சடித்ததாக கருதப்படும் இயந்திரம் மற்றும் கணினி ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.