advertise here on top
Join yazhnews Whatsapp Community

பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாறுமாறாக தாக்குதல்!


அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்குள் வெளியாட்கள் நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று (11) மேலதிக வகுப்பு இடம்பெற்றும் போதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதன்போது இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்த இரண்டு மாணவர்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.