![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihPiVXtjjNLcSYycGcmHe70irTT7bDR1Oo66iHrCBWLFdNK7wmG6SeIAikyz96qmHFrRUq9fHviTaBk7Q4Tfu0xKfmlvPwcmToJR2VcWQjKnysA-P5ieRd18TqZnJ6voFXoR6yNboyTFjv0xqcbRerOGB7JAOOnoykhdOzc_2fU0XQF54wR4itMZERdQ/s16000/5BF4D001-C2DC-4D5F-900A-734AC1E445C4.jpeg)
மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
![header ads](https://i.ibb.co/1ZW4fg9/417712-CC-603-F-4-B74-8-BA0-7-D8-FFEF555-CA.png)
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.