பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் சில விசேட திட்டங்களை தயாரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, பொருட்கள் பாவனைக்கு உகந்த நிலையில் உள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பொருட்களின் விலைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விளம்பரம்
மேலும், பண்டிகை காலங்களின் போது போலி பணங்கள் புழக்கத்தில் விடப்படுவதாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் தங்கள் பணப்பையை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

மக்கள் வீட்டை விட்டு வெகுதூரம் செல்வதாக இருந்தால் அதனை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்த வேண்டாம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.