ரணில் மீது எமக்கு இருந்தது தவறான அபிப்ராயம் என்பது இப்போது புரிகிறது! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணில் மீது எமக்கு இருந்தது தவறான அபிப்ராயம் என்பது இப்போது புரிகிறது! -அலி சப்ரி


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு ஒரு திறமையான தலைவர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சப்ரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது இதுவே முதல் தடவை எனவும் தாம் முன்னர் எதிர் அணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் கைகோர்ப்பாரா என வினவியபோது, ​​ஒரு அரசியல் கட்சியை விட்டுக்கொடுக்கும் வகை தாம் இல்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கையின் தலைவராகத் தகுதியுடைய வேறு எவரையும் காண முடியாது என அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

தாம் முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான எதிர் அணியில் செயற்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் அவர் மீது தவறான அபிப்பிராயம் இருந்தமை தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.