மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் மாயம்! பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் மாயம்! பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

இலங்கை மத்திய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 5 மில்லியன் ரூபா காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மத்திய வங்கி அதிகாரிகளினால் கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உயர் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய பெட்டகத்தினுள் வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கூறுகிறது.

இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய வங்கியும் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.