பாடசாலை BIG MATCH கொண்டாட்டத்தில் உயிர் பலியான இரு மாணவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை BIG MATCH கொண்டாட்டத்தில் உயிர் பலியான இரு மாணவர்கள்!


பதுளையில் உள்ள பாடசாலை ஒன்றின் வருடாந்த BIG MATCH கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


குறித்த கிரிக்கெட் போட்டிக்காக சென்றிருந்த மாணவர்கள் பதுளை நகரில் உள்ள மைதானம் ஒன்றுக்குள் வாகன பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.


இதன்போது, மாணவர்களுடன் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.


அதில் பயணித்த 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 09 மாணவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 19 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.