யாழில் 3 பெண்கள் உட்பட ஐவர் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் 3 பெண்கள் உட்பட ஐவர் கொலை!


யாழ். - நெடுந்தீவு 12ஆம் வட்டாரம், துறைமுகம் பகுதியில், வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


எனினும் இந்த கொலைகள் நேற்றிரவில் (21) இருந்து இன்று அதிகாலை வரையிலான காலப்பகுதியில், இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.


இனந்தெரியாத சிலர் குறித்த கொலைச் சம்பவத்தை முன்னெடுத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. ஏனைய மூவரும் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன், காயமடைந்துள்ள மற்றுமொரு பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருகைத்தந்தவர் என காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.