தனது 12 நண்பர்களை சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்த பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது 12 நண்பர்களை சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்த பெண்!


தனது 12 நண்பர்களை சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்த பெண் ஒருவரை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


35 வயதான சராரத் ரங்சிவுதாபாா்ன் என்ற குறித்த பெண்ணையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கொலை செய்யப்பட்ட 12 பேரில் சராரத் ரங்சிவுதாபாா்னின் காதலரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணுடன் ஒன்றாக வெளியிடம் சென்ற அவரது நண்பி திடீரென உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் சந்தேகம் கொண்டு, காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.


அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் பின்னர், உயிரிழந்த நண்பி உட்பட மொத்தமாக 12 பேரை சயனைட் விசம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கொலை செய்யப்பட 12 பேரில் அவரது காதலனும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.