விற்பனை நிலையத்தில் இருந்து SUV ரக காரை திருடிச்சென்ற நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விற்பனை நிலையத்தில் இருந்து SUV ரக காரை திருடிச்சென்ற நால்வர் கைது!


நீர்கொழும்பு குரணையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் இருந்து 40 மில்லியன் ரூபா பெறுமதியான SUV வாகனத்தை திருடிய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் 18 – 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கட்டானா கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த தினத்தில் வாகனத்தை திருடுவதற்கு உதவிய சந்தேகநபர்களில் 19 வயதுடைய கார் விற்பனை நிலையத்தில் வேலை செய்பவரும் அடங்குவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


SUV ரக வாகனத்தை திருடிவிட்டு வாகன விற்பனை நிலையத்திலிருந்து தப்பிச் செல்லும் போது கொச்சிக்கடை பகுதியில் விபத்துக்குள்ளானதை அடுத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்தையடுத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.