1375 மில்லியன் ரூபா பிட்காயின் மோசடி; பெண்ணை ஏமாற்றிய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

1375 மில்லியன் ரூபா பிட்காயின் மோசடி; பெண்ணை ஏமாற்றிய நபர் கைது!


பிட்காயின் மோசடி மூலம் 1,375 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


BINANCE ஊடாக நிதி மோசடி செய்ததற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


சந்தேக நபர் குறித்த பெண்ணிடம் அவளுக்கு சொந்தமான பிட்காயின்களை அதிகரித்து கொடுப்பதாக உறுதியளித்து, அவளை ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.