CCTV: தனது ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய் (VIDEO)

advertise here on top
Join yazhnews Whatsapp Community

CCTV: தனது ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய் (VIDEO)

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண்ணொருவர் தனது 1 1/2 வயது மகளை இறால் தொட்டியில் தள்ளிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உடப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியொருவர், தனது கணவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்தப் பெண் இதனைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தை குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றது. குழந்தையின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை இறால் வளர்ப்பு தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய் சந்தேகத்தின் பேரில் உடப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி தொட்டியில் விழுந்ததாக சந்தேகநபர் முதலில் பொலிஸாரிடம் தெரிவித்திருந்த போதிலும், இறால் பண்ணையின் சிசிடிவியை பரிசோதித்த போது சந்தேக நபர் தனது மகளை கையால் பிடித்து தள்ளுவது தெளிவாக காணப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறால் தொட்டிக்குள் குழந்தை போராடிக்கொண்டிருந்ததை பார்த்த தொழிலாளி ஒருவர் குழந்தையை காப்பாற்றியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. (யாழ் நியூஸ்)



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.