கணவன் மனைவி தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் சார்ஜெண்ட் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணவன் மனைவி தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் சார்ஜெண்ட் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம்!


விசாரணைகளை மேற்கொள்ளச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உட்பட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் நேற்று (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இந்த தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.