இம்முறை ரமழான் தொடர்பில் முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு விசேட சலுகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை ரமழான் தொடர்பில் முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு விசேட சலுகை!

எதிர்வரும் ரமழானில் முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருட ரமழான் மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை நடைபெற உள்ளது.

அதிகாரிகள் சமயச் சடங்குகளில் ஈடுபடும் வகையில் கூடுமானவரை சிறப்பு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் சிறப்பு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக முன்பணத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.