வாகன இறக்குமதிகளை மீள ஆரம்பிக்க கோரிக்கை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன இறக்குமதிகளை மீள ஆரம்பிக்க கோரிக்கை?


வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சாந்த கமகே தெரிவித்தார்.


வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், உள்ளூர் பயன்படுத்திய வாகன சந்தைக்கான கடன் வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பதாக மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்ததாக சாந்த கமகே வெளிப்படுத்தினார்.


இவ்வாறான நடவடிக்கையானது உள்ளூர் பயன்படுத்திய வாகன சந்தையை வலுப்படுத்தும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.