ரோஹித ராஜபக்சவின் கடன் அட்டையில் இலிருந்து அமெரிக்க டொலர்கள் திருட்டு - பொலிஸ் விசாராணைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரோஹித ராஜபக்சவின் கடன் அட்டையில் இலிருந்து அமெரிக்க டொலர்கள் திருட்டு - பொலிஸ் விசாராணைகள் ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டை காணாமல் போனமை தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி கிரெடிட் கார்டில் சுமார் 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிற்கு பொலிஸாரால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி கோட்டேயிலுள்ள வீடொன்றில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேளையில் தனது கடன் அட்டை காணாமல் போனதாக ரோஹித ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

விசாரணை நோக்கங்களுக்காக வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை அறிக்கையை வழங்குமாறு சம்பத் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.