![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho_lyRT_PVK5VSV5SIAsIsxsVTD5tuLy3X2vXBt94_BH3rZULYse-iWnsJ0thPQshwdhqJQvgBjKmrPz8cho3R-lDq9F2YG56gckVwGi4Rds6jZrv3ncxFZVOr9ZlseYNa78O-wjWibeubKNq80RH8apwaLnXm2nm3JrE-hFtLLokr0x5437ZD2jkm3A/s16000/F5A58884-22F5-4AE3-A3B9-243864F70459.jpeg)
மேற்படி கிரெடிட் கார்டில் சுமார் 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிற்கு பொலிஸாரால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி கோட்டேயிலுள்ள வீடொன்றில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேளையில் தனது கடன் அட்டை காணாமல் போனதாக ரோஹித ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.
விசாரணை நோக்கங்களுக்காக வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை அறிக்கையை வழங்குமாறு சம்பத் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.