தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகள்!

கொவிட்-19 நோய்ப்பரவல் அத்துடன் அதனைத்தொடர்ந்து வந்த பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் மூலம் பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு உதவும் முகமாக இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்க;டாக பலவகையான கடனை காலந்தாழ்த்தி செலுத்தும் வசதிகளையும் சலுகைத் திட்டங்களையும் இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி வீதங்கள், தொழில்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல்ஃ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இத்திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.

இச்சலுகைகள், சுற்றுலாத் துறை, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழில்நுட்பம், ஏற்பாட்டுச்சேவை வழங்குநர்கள், போக்குவரத்து, பாடசாலை வேன் சேவை வழங்குநர்கள், பார ஊர்திகள், சிறிய பொருள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் அத்துடன் தனியார் துறை ஊழியர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட துறைகளின் பல சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு பெருமளவில் உதவியளித்தன. கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட வங்கித்தொழில் துறை மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறை என்பவற்றின் கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட கடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதியின் இறுதிக்;கட்டம் முறையே, 2022.06.30 அன்றும் 2022.03.31 அன்றும் முடிவுற்றது.

நிதியியல் முறைமை மீதான ஏதேனும் மிகையான அழுத்தத்தினை தடுக்கும்பொருட்டு, நிலைபேறான வழியில் கடனைக் காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதியினை முடிவுறுத்துவதற்கான தேவையினை பரிசீலனையிற்கொண்டு, கடன்பெறுநர்களது புதிய மீளச்செலுத்தும் இயலளவின் அடிப்படையில் பொருத்தமான மீளச்செலுத்தல் ஏற்பாடுகள் மீது அத்தகைய கடன்பெறுநர்கள் இணங்குவதை இயலச்செய்வதற்கு உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கும் முறையே வழங்கப்பட்ட 2022ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2022ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க சுற்றறிக்கை என்பன ஊடாக ஆறு மாதங்களைக் கொண்ட காலப்பகுதியில் விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் உள்ளடங்கலாக பொருளாதார துறைகளிலுமுள்ள அனைத்து பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கும் பொருத்தமான சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளையும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களையும் இலங்கை மத்திய வங்கி கோரியிருந்தது. இதற்கிடையில், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்யும் வாய்ப்புடன்கூடிய வளம்பெறக்கூடிய வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் நோக்குடன் உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறைவாக செயலாற்றுகின்ற அத்துடன் செயலாற்றமற்ற கடன்பெறுநர்களை இனங்கண்டு உதவும் பொருட்டு கொவிட்-19 இற்குப் பிந்திய புத்துயிரளித்தல் பிரிவுகளை உருவாக்குமாறு இலங்கை மத்திய வங்கி நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது.

கடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதியினதும் சலுகைகளினதும் வேறுபட்ட கட்டங்களின் போது நிதியியல் நிறுவனங்கள், சலுகைகளுக்கான 3.3 மில்லியன் கோரிக்கைகளுக்கு மேலதிகமாக அனுமதியளித்துள்ளன. 2022 இறுதியிலுள்ளவாறு இது மொத்தமாக ரூ.5,569 பில்லியன் ஆகும். 

முழு அறிக்கை



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.