பெண்ணொருவரை கூட்டு பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவரை கூட்டு பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!


பாணந்துறை தெற்கு பகுதியில் பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள், பெண்ணின் வீட்டிற்கு செல்ல லிப்ட் தருவதாக கூறி தங்களுடன் பயணிக்கும்படி சிறுமியை வற்புறுத்தியுள்ளனர்.


எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின்படி, அந்த நபர்கள் அவரை வாத்துவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று, தொண்டையில் கத்தியை வைத்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


கடந்த மார்ச் மாதம் 03ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


100 இற்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பாணந்துறை தெற்கு பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் 45, 24 மற்றும் 23 வயதுடைய பாணந்துறை, அருக்கொட மற்றும் ஈகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.