சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!


பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு காவல்துறையினர் விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளனர்.

காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் காவல் துறையினரால் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து காவல் துறை நிலையங்களுக்கும் உரித்துடைய வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட சில குற்றங்களை முன்னுரிமை அடிப்படையில் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய,

01. சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனத்தை செலுத்துதல்.

02. 18 வயதை குறைந்தவர்கள் வாகனத்தை செலுத்துதல்.

03. வாகன வருமானவரிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்று வானத்தை செலுத்துதல்.

04. வீதி விதிமுறைகளை மீறுதல்.

05. சுற்றுவட்டங்களுக்கு அருகில் இழைக்கும் தவறுகள்.

06. வீதி மாறுமிடத்தில் மேற்கொள்ளும் தவறுகள்.

07. ஒழுங்கைகள் மாறுமிடத்தில் இழைக்கும் தவறுகள்.

08. வீதி சமிக்ஞை விளக்குகள் தொடர்பான தவறுகள்.

09. பேரூந்து நிறுத்தும் நிலையங்களில் இழைக்கும் தவறுகள்.

10. தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல்.

11. பாதுகாப்பு தலைக்கவசமின்றி உந்துருளியை செலுத்துதல்.

ஆகிய குற்றங்களுக்கு முன்னுரிமையளித்து கண்காணிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.