25 வயது பெண் கொலை; கணவரான கணினி பொறியியலாளர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

25 வயது பெண் கொலை; கணவரான கணினி பொறியியலாளர் கைது!


புஸ்ஸல்லாவையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கணினி பொறியியலாளரான அவரது கணவரை கைது செய்துள்ளதாக மிரிஹான காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


நுகேகொடை - விஜேராம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த வேளையில் விசாரணைக்காக இன்று (06) அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


எல்பொட - கட்டுகித்துல பகுதியைச் சேர்ந்த சதாசிவம் நிரஞ்சலா என்ற 25 வயதான பெண் புஸ்ஸல்லாவ - சோகம தோட்டப்பகுதியில் உள்ள புதரொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (04) சடலமாக மீட்கப்பட்டார்.


கயிறு போன்றவற்றால் கழுத்தை நெரித்து அவர் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இந்த தம்பதியினர் கொழும்பில் இருந்து கட்டுகித்துல பகுதிக்கு சென்றிருந்தபோது, புஸ்ஸலாவை நகரில் வைத்து சந்தேகநபரான கணினி பொறியியலாளருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


பின்னர் சந்தேகநபர் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.