QR முறைமையை நீக்குவது தொடர்பான தீர்மானம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

QR முறைமையை நீக்குவது தொடர்பான தீர்மானம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர்!


எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறைமையை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், தற்போதைய எரிபொருளை ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை ஏப்ரல் மாதத்துடன் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.